மருள்நோக்கு

Saturday, October 4, 2014

அடைக்கப்பட்ட ஓர் அறையினுள்
ஓர் நபராய்
எங்களை நாங்களே
கண்ட கனவுகள் தாம்
நம் நிஜங்கள்,

எல்லாக் கனவுகளைப் போல
மருள் நோக்கில் நகர்கிற
இந்த கனவின் முடிவிலும்
அகண்ட அந்தகாரத்தில்
நிறைவேறா
உணர்ச்சிகளின் தூண்டலில்
உயிர் கொண்டு
ஓர் மிருகம் காத்திருக்கும்

அர்த்தமற்று ஆயிரம் சிந்தனைகள்
ஆலாப் பறக்கையிலே
வௌியே
வாசல் கடந்து மழைபெய்யும்,
கலைந்த கூட்டினின்று,
ஈசல்கள் ஔி தேடி பறந்து வரும்,
பெரும் தீயில் அவை மடிந்து போகும்,
போய்மடிந்த ஈசல் கூட்டங்களை
தேடுவதில் தான்
நம் மயக்கங்கள்

No comments:

Post a Comment