அக்கரையில்

Sunday, September 30, 2012

என்றாவது ஓர் நாள்
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்...

வார்த்தைகளின் நிஜமும்,
கனவுகளின் துடிப்பும்,
சுதந்திரத்தின் வனப்பும்,
வரையறையற்ற மிதப்பும் நிறைந்து
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்

தீட்டிய வண்ணங்கள்
எழுமாற்று ஓவியங்களாய் கண்முன் தோன்றும்.
தோல்வியின் வலிகளும்,
காயங்களின் தடங்களும்,
வெற்றியின் படிகளென சொல்லி சிரிக்கும்...
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்

எதிரிகளால் எழுந்த அவமானங்களும்
ஒருங்கே துரோகங்களும்
மார்பில் விழுந்த விழுப்புண்களென மார்தட்டிடும்
தெரிந்தே வீழ்ந்த தவறுகளும்
புரிந்தே நான் மனிதனான கதையை
என்னிடம் சொல்ல...
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்

தூக்க தூக்கு

Sunday, September 9, 2012

சாவு வீட்டிற்கு ஊரே கூடியது,
கிடக்கிற உடலுக்கு பெயரில்லை
வெறும் கட்டைக்கு ஒரே பெயர்
'பிணம்'...
ஊர் கூடி வைத்த பெயரை
ஊரே நீக்கி
'பிண'ப்பெயரை வைத்தது,
"வீட்டில் வைத்திருக்க முடியாது,
தூக்கு தூக்கு"
என்று துரிதப்படுத்தி,
இடுகாட்டில் சாம்பலாக்கி
மாண்டவன்
நினைவுகளுக்கும் சேர்த்து
தலைமுழுகி மறந்து போனார்கள்...


(குறிப்பு - திருமந்திரத்திலிருந்து எழுதப்பட்டது)