எண்ணிப்பார்த்தால் அர்த்தமற்றுபோகும்
ஒலிகளின் சேர்க்கையாய் பெயர்கள்
வீட்டுக்கொன்;று
ஊருக்கொன்று
உள்ளொன்று
புறமொன்று
பெயர்களால் இனங்காணப்படுகிறோம்,
பெயர்களால் சுட்டப்படுகிறோம்
பெயர்களாகவே வாழ்கிறோம்
அர்த்தமற்ற ஓலிகளின் சேர்க்கையில்
உருவாகி
நீயென்றும் நாமென்றும்
உணர்வாலும் புணர்வாலும்
உருவாகும் 'நான்'
நிலைபெறுமோ நித்தியமாய்