ஓர் கவிதை

Tuesday, January 14, 2014

ஒரு கவிதையை என்னுள்
காதலித்துக் கொண்டேன்,
ஆரம்பமும் முடிவும்,
இடையில் நடப்பவையும்,
ஆங்காங்கே சொற்களாய்
எண்ணங்களாய்
என்னுள் முகிழ்ந்து சரமாகி
புவனம் முழுதும் 
மலர்க்காடாய் தெரியும்

சலனம் கொண்டு விழித்துக்கொள்ள
எல்லாம் கனவாய் மறந்துபோகும்,
திருவிழாவில் தொலைத்த தாயை 
தேடும் மழலைபோல் - என் மனம்
அக்கவிதை தேடி அலையும்

ஓர் தன்னிலை மயக்கமாய்
சுயானுபூதியாய்
அக் கவிதை இன்னும்
என்னோடு இருக்கும்...