ஒரு கவிதையை என்னுள்
காதலித்துக் கொண்டேன்,
ஆரம்பமும் முடிவும்,
இடையில் நடப்பவையும்,
ஆங்காங்கே சொற்களாய்
எண்ணங்களாய்
என்னுள் முகிழ்ந்து சரமாகி
புவனம் முழுதும்
மலர்க்காடாய் தெரியும்
சலனம் கொண்டு விழித்துக்கொள்ள
எல்லாம் கனவாய் மறந்துபோகும்,
திருவிழாவில் தொலைத்த தாயை
தேடும் மழலைபோல் - என் மனம்
அக்கவிதை தேடி அலையும்
ஓர் தன்னிலை மயக்கமாய்
சுயானுபூதியாய்
அக் கவிதை இன்னும்
என்னோடு இருக்கும்...