ஜன்னல்களற்ற வீட்டினின்று
இரகசியங்கள் கசிவதில்லை,
ஜன்னல்களற்ற வீட்டின் மனிதர்களை
யாரும் கண்டதில்லை,
வழிப்போக்கர்களால் அவர்கள்
தேவர்களாகவோ அன்றி அசுரர்களாகவோ
உருவகிப்படுவர்.
ஜன்னல்களற்ற வீட்டினுள் மரணம்
நிகழ்வதில்லை
அங்கே கூக்குரல்களோ,
சிரிப்பொலிகளோ,
எழுவதில்லை
ஜன்னகளற்ற வீட்டில் தான் உலகை
புரட்டிடும் விந்தைகள் நடக்கிறது,
அங்கேதான் அந்த விந்தை அழிவிற்கு
வித்திடுகிறது
ஜன்னல்களற்ற வீட்டில்
சுதந்திர குருவிகள் இசைப்பதில்லை,
வெறுமையின் இராகமொன்றே
ஒலிக்கிறது
ஜன்னல்களறற் வீட்டில்
சண்டைகள் இல்லை,
புணர்ச்சிக்ள இல்லை,
உணர்ச்சிகள் இல்லை,
அங்கே மொழி கண்டு யாரும்
குழைவதில்லை
ஜன்னல்களற்ற வீட்டில்தான்
உணர்ச்சியற்ற கவிதைகள் பிரசவிக்கிறது