தங்கம் வேய்ந்த
தெருக்களின் வழியே
அத்தேர் நகர்கிறது
நானோ,
மூத்திர சந்துகளிலும்
முட்டு இடுக்குகளிலும் ஒதுங்கி
தேர் அதன் தரிசனம் கண்டுவிட
கக்த்தின் இடுக்கில் மடக்கிய
கந்தைத் துணியும் கொண்டு
ஏக்கத்துடன் அங்கலாய்க்கிறேன்,
ஐயா,
திரும்பத் திரும்ப வந்து பார்க்கிறேன்
உன் தரிசனம் கிடைக்கவில்லை
கொட்டிக் கொட்டித் தீர்த்தபின்னும்
எந்த விலைக்கும் நீ அகப்படவில்லை