அலைமோதும் கடற்கரை
மணல்மேடைதனில்
அவனும் பின்னே இவனும்
நடந்துசென்றார்கள்
மணலில் அவன் விட்டுவந்த
பாதச்சுவடுதனை
பின்னே வந்த இவன்
அழித்துசென்றான்
அவன் அமைதியாய்
அதிலொரு குறிப்பறிந்தான்
பின்வந்த இவனின்
சுவடுகளை
அலைகள் மோதி
அடித்துச் சென்றுகொண்டிருந்தன...