உனக்கும் எனக்குமிடையில்

Sunday, January 29, 2012

அங்கும் இங்குமாக நீயும் நானும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளில்.

நம்மில் யார் மறைந்துவரும் நினைவுகளையும்
குறைந்துவரும் பொழுதுகளையும் முதலில் காண்பவர்.
எஞ்சுவது சோகமாயினும் குறையில்லை...
இனியேனும் உண்மை துலங்கட்டும்

விடிந்திட்ட பொழுதுகளிலேனும் நான் கண்ட கனவுகள்
நிறைவேறக் கண்டாயா
நகராத கணங்களிலேனும் நானாக நான் வாழ்ந்திடக்
கணங்கள் கண்டாயா.

என் கண்ணாடிகளில்
விழும் நீயும், நானும் ஒன்றெனன்று...
பிறர் உரைப்பது பொய்யென்றாவது கண்டாயா?