மகிமைப்படுத்தல்

Thursday, November 28, 2013

ஆங்காங்கே இருண்டமூலைகளில்
மக்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்

தமக்கே கேட்காத குரல்களில்
ஏதேதோ சலசலக்கிறார்கள்

கீற மடித்த காகிதத் தாளை
கொடியாயும்,
பொத்திய உள்ளங்கையுள்
ஏற்றிய சுடருடன்
மௌன அஞ்சலி புரிகிறார்கள்.

கூட்டத்தில் வந்திணையும் 
ஒவ்வொருவரும் 
வருகை பற்றியும்,
பெருவெற்றி பற்றியும்,
எதிர்வு கூறுகிறார்கள்..

இரைச்சலாய் கேட்ட வண்ணம்...
ஆங்காங்கே மனித மனங்களின்
இருண்ட மூலைகளில்
ஓர் எண்ணம் குடிகொள்ள...
ஆங்காங்கே இருண்டமூலைகளில்
மக்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்