காதில் விழுந்த ஓசைகள்
வழக்கம் போல தேவலோகத்தில் விவாதம்.
கதை ஒன்று
பாத்திரங்கள் வேறு
யார் பெரியவனென்ற சண்டை தொடங்கியது
மன்மதனுக்கும் சிவனுக்கும் இடையே
'உன்னை பார்வையில் எரித்தேன்', என்றான் சிவன்
மன்மதன் உரைத்தான் 'இருந்தும் உம்மை வென்றேன்..'
பிரம்மாவும் விஷ்ணுவும் சாட்சிகளாகினர்
'நான் அடியைக் கண்டேன்..'
என்று பிரம்மா
'நானும் முடியைக் கண்டேன்..'
என்று விஷ்ணு
பொய்மையோடு
மன்மதனின் பக்கம் ஓங்கி வந்தது
வாய்மையோடு
தேவனின் பக்கம் தாழ்ந்து சென்றது
இந்திரன் 'சிவன் பிச்சை எடுத்தான்..'
சனி 'நான் அவனை பிடித்தேன்..'
என்றான்..
'இவன் பித்தன்..','பேய்களுடன் ஆடுபவன்..'
குரல்கள் ஓங்கி ஒலித்தன..
கோபம் பொறுமையின் எல்லை கடந்தது...
நெற்றிக் கண் கனல் எரிந்தான்
மன்மதன் முற்றாய் அழிந்தான்
மீட்பின்றி.
மீட்பின் வழியறியா தேவன்
தனிமையில் வீழ்ந்தான்
பாவம் தேவன்.
தேவியும் தான்.
No comments:
Post a Comment